Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ... புவனேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா; பூத்தட்டு எடுத்து பக்தர்கள் பரவசம் புவனேஸ்வரி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
23 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட முருகன் சிலை; அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
23 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட முருகன் சிலை; அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

19 ஆக
2023
04:08

சென்னை, தமிழகத்தில் இருந்து, 23 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட முருகன் கற்சிலை, அமெரிக்காவில் இருப்பதை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டறிந்து உள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூர் கிராமத்தில், மிகவும் பழமையான அமிர்தகடேஸ்வரர் கோவில் இருந்தது. இக்கோவிலை, டில்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவன் மாலிகாபூர் படையெடுத்து சிதைத்தார். இதனால், 2 ஏக்கர் பரப்பளவில் இருந்த அந்த கோவில், எருக்கஞ்செடி மற்றும் முட்புதர்கள் மண்டி கிடக்கிறது.  அந்த கோவிலில் பிரம்மா, சண்டிகேஸ்வரர், வருண லிங்கம், சோமாஸ்கந்தர் என, 13 கற்சிலைகள் மண்ணில் புதைந்தன. இவற்றில், நின்ற நிலையில் முருகன் கற்சிலையை, 23 ஆண்டுகளுக்கு முன், மர்ம நபர்கள் திருடிவிட்டனர். அப்போது, ஊர் மக்கள், போலீசில் புகார் அளிக்கவில்லை. சமீபத்தில், அந்த ஊரைச் சேர்ந்த பெரியசாமி என்பவர், சென்னை அசோக்நகரில் உள்ள, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். கூடுதல் டி.ஜி.பி., சைலேஷ்குமார் யாதவ் தலைமையிலான போலீசார், முருகன் கற்சிலை, அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டதை உறுதி செய்தனர். அந்தச் சிலை, அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் கட்டுப்பாட்டில் இருப்பதை கண்டறிந்தனர். சிலையை வெளியுறவு அமைச்சகம் வாயிலாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி கோயிலில் கந்த சஷ்டி விழா நவ.,2ல் துவங்கி நவ., 7ல் சூரசம்ஹாரம், நவ., 8 திருக்கல்யாண உற்சவம் நடைபெற ... மேலும்
 
temple news
கோவை, மருதமலை சுப்ரமணியர் சுவாமி கோவில் மற்றும் அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி காந்திமதி அம்மன் இன்று காலை பச்சை ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ 2.99 கோடி காணிக்கையாக கிடைத்தது. பழநி ... மேலும்
 
temple news
தேவகோட்டை; ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் உள்ள பைரவருக்கு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar