பாண்டூர் ஆதி வைத்தியநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2023 11:08
மயிலாடுதுறை: பாண்டூர் ஆதி வைத்தியநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பாண்டூர் கிராமத்தில் பாலாம்பிகா சமேத ஆதி வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்களில் 2வது தரமான இந்த கோவிலில் பஞ்சபாண்டவர்கள் பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றுள்ளனர். மாணிக்கவாசகரால் போற்றி பாடல் பெற்ற இக்கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும் 18 ஆம் தேதி யாகசாலை பூஜைகளும் தொடங்கி நடைபெற்றன இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து மகாபூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வளம் வந்து விமானங்களை அடைந்தன. வேத மந்திரங்கள் ஓத மங்கள வாத்தியங்கள் இசைக்க சிவாச்சாரியார்கள் சுவாமி அம்பாள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவ ஆகம பாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாச்சாரியார், சதாசிவ சிவாச்சாரியார் தலைமையிலானோர் நடத்தி வைத்தனர். தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கும்பாபிஷேகத்தில் அய்யாவாடி சங்கர் குருக்கள் உள்ளிட்ட திரளான பக்தர்களுக்கு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் முன்னதாக சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது கும்பாபிஷேகம் ஏற்பாடுகளை திருப்பணி கமிட்டி தலைவர் சென்னை ராதாகிருஷ்ணன் தலைமையிலானோர் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.