கோவை ஈச்சனாரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2023 10:08
கோவை ஈச்சனாரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவையில் பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. முன்னதாக கடந்த 20ம் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது. விழாவில் பிள்ளையார் வழிபாடு, மண்ணெடுத்தல், காப்பணிவித்தல், திருக்குடங்களை வேள்விச்சாலைக்கு எடுத்து வருதல், முதல் கால, இரண்டாம் கால, மூன்றாம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்று வந்தன. இன்று காலை வேள்வி பூஜைகளை தொடர்ந்து, ஈச்சனாரி விநாயகர் கோவில் விமானம் மற்றும் ராஜகோபுரத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.