Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருகனின் முதல் படை வீடான ... இன்று வரலட்சுமி விரதம்; மகாலட்சுமியை வழிபட இழந்த செல்வம் கிடைக்கும்.. கணவனின் ஆயுள் நிலைக்கும் இன்று வரலட்சுமி விரதம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோயிலில் தமிழக கவர்னர் ரவி சுவாமி தரிசனம்; தங்கரதம் இழுத்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோயிலில் தமிழக கவர்னர் ரவி சுவாமி தரிசனம்; தங்கரதம் இழுத்து நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

24 ஆக
2023
11:08

பழநி: பழநி முருகன் கோயிலில் தமிழக கவர்னர் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.

பழநி முருகன் கோயிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார். பழநி பஸ்ஸ்டாண்ட் அருகே மயில் ரவுண்டான பகுதியில் பா.ஜ.வினர் தேசிய கொடி ஏந்தி வரவேற்றனர். பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி நிலையத்திற்கு மாலை 5:45க்கு வருகை புரிந்தார். அங்கு கலெக்டர் பூங்கொடி, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி, அபிநவ்குமார், ஏ.டி.எஸ்.பி., வெள்ளைச்சாமி திண்டுக்கல் எஸ்.பி., பாஸ்கரன், மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். போலிசார் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

மாலை 6:15க்கு புறப்பட்டு முருகன் கோயிலுக்கு வின்ச் வழியாக மேலே சென்றார். கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து மேளதாளத்துடன் வரவேற்றார். சுவாமி தரிசனத்திற்கு பின் பிரசாதம் வழங்கப்பட்டது. போகர் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு புலிப்பாணி ஆசிரமம் சார்பில் போகர் திருவுருவ படத்துடன் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மலைக்கோவிலில் தங்கரதம் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார். அதன்பின் வின்ச் வழியாக கீழிறங்கி தண்டபாணி நிலையம் இரவு 7:20க்கு வந்தார். இரவு 7:30 மணிக்கு புறப்பட்டு சாலை மார்க்கமாக கோவை திரும்பி சென்றார். தமிழக கவர்னர் வருகையை முன்னிட்டு அவசரகதியில் சாலைகள் சீரமைக்கப்பட்டது. கவர்னர் வரும் சாலையில் இருந்த ஸ்பீடு பிரேக்கர்கள் அகற்றப்பட்டன. திண்டுக்கல், தேனி பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் இன்று ஐப்பசி மாத கிருத்திகை விழா ஒட்டி அதிகாலை, 4:30 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; ஐப்பசி மாதப்பிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை நடை 16ம் தேதி திறந்தது. 17 ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு நடை ... மேலும்
 
temple news
கோவை; காரமடையில் உள்ள அரங்கநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இன்று புரட்டாசி 5ம் சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி ஏழுமலையான் பட்டு சாற்றப்பட்டது. ... மேலும்
 
temple news
வாடிப்பட்டி; வாடிப்பட்டி நீரேத்தான், மேட்டு நீரேத்தான் கிராம ஆதி அய்யனார், சோனை சுவாமி கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar