ஆதியோகி சிலைக்கு அனுமதி இருக்கா.. ஈஷா யோகா மையம் சொல்வது என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஆக 2023 10:08
தொண்டாமுத்துார் : கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலைக்கான உரிய ஒப்புதல்கள் எங்களிடம் உள்ளது. எங்கேயும் சமர்ப்பிக்க தயார் என, ஈஷா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை ஈஷா வளாகத்தில் உள்ள ஆதியோகி சிலை மற்றும் கட்டடங்கள் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கின் விசாரணை நேற்று நடந்தது. அதில், ஆவணங்களை, கோவை நகர திட்ட இணை இயக்குனர் ஆய்வு செய்ய வேண்டும் என, தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. இந்நிலையில், இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது: அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆதியோகி சிலைக்கான உரிய ஒப்புதல்கள் எங்களிடம் உள்ளது. அதை எங்கேயும், எப்போதும் சமர்ப்பிக்க தயாராக உள்ளோம். ஆதியோகி சிலை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதிகளை பெற்றுள்ளோம். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி அதிகாரிகள் முன் சமர்ப்பிப்போம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.