கோவை; ஈச்சனாரி மகாலட்சுமி கோயிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆவணி மாதத்தில் வரும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு கோவை ஈச்சனாரி மகாலட்சுமி கோயிலில் உள்ள மூலவர்கள் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் வளையல் அலங்காரத்தில் முப்பெரும் தேவியர்கள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.