கோவில் உண்டியலில் இருந்த 100 கோடி செக்; அக்கவுண்டில் இருந்தது 17 ரூபாய் மட்டும்.. நிர்வாகிகள் ஷாக்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஆக 2023 12:08
ஆந்திரா; ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பாண்ணா வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படும். அதன்படி நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அப்போது உண்டியலில் பக்தர் ஒருவர் 100 கோடி ரூபாய்க்கு காசோலை அளித்திருந்தார். வராஹ லட்சுமி நரசிம்ம தேவஸ்தானம் என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலையில் முதலில் 10 ரூபாய் என்றும், பிறகு அதை அடித்து 100 கோடி ரூபாய் என்றும் எழுதப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோயில் நிர்வாகிகள் வங்கியில் விசாரித்தனர். அந்த காசோலை பெத்த பள்ளி ராதாகிருஷ்ணாவின் சேமிப்புக் கணக்கு காசோலை என்பது தெரிந்தது. மேலும் அவரது அக்கவுண்டில் 17 ரூபாய் மட்டும் இருப்பு இருந்தது. நிர்வாக பணிகளுக்கு மத்தியில் கோயில் நிர்வாகிகளை ராதாகிருஷ்ணா அலைக்கழிப்பு செய்துள்ளார். ராதாகிருஷ்ணா வேண்டுமென்றே இவ்வாறு செய்ததாக தெரிய வந்தால் அவர் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.