பதிவு செய்த நாள்
27
ஆக
2023
11:08
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், சுக்ல பக்ஷ ஏகாதசி வைபவம் நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில், வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவிலாகும். இங்கு ஆவணி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் இன்று நடந்தது. அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், கால சந்தி பூஜை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து விஷ்வசேனர் பூஜை, கலச ஆவாஹனம் நடந்தது. பின்பு ஸ்ரீதேவி, பூதேவி, சமேத உற்சவர் அரங்கநாத பெருமாளுக்கு, ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அரங்கநாத பெருமாள் மஞ்சள் நிற பட்டுடுத்தி, வெள்ளி சிம்மாசனத்தில், மேளதாளம் முழங்க, திருக்கோயில் வளாகத்தில், புறப்பாடு நடைபெற்று பக்தர்களுக்கு அன்பளித்தார். ஆஸ்தானம் அடைந்தவுடன் உச்சக்கால பூஜை, சாற்று முறை, மகா தீபாராதனை, தீர்த்த பிரசாத விநியோகம் செய்யப்பட்டது. இந்த வைபவத்தில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராஸ்தர்கள், ஊழியர்கள், பக்தர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.