Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீவேதாந்த தேசிகர் திருநட்சத்திர ... பகைவரும் பாராட்டும்படி வாழ்தல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏர்வாடியில் சந்தனக்கூடு ஊர்வலம்: பக்தர்கள் மலர் தூவி வரவேற்றனர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 அக்
2012
10:10

கீழக்கரை: ராமநாதபுரம் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில், நேற்று அதிகாலை நடந்த ஊர்வலத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சந்தனக்கூடுக்கு மலர் தூவி வரவேற்றனர். ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா 838 ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா, செப்., 17ல் மவ்லுது (புகழ்மாலை) ஓதப்பட்டு துவங்கியது.நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு போர்வை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை சந்தனம் கரைக்கும் நிகழ்ச்சி நல்ல இபுறாகிம் மஹாலில் நடந்தது. யானை, குதிரை, தாரை, தப்பட்டையுடன் சந்தனக்கூடு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக, நேற்று காலை 5 மணிக்கு தர்கா வந்தது. நான்கு சக்கர சப்பரத்தில், மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டை, கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், மலர்கள் தூவி வரவேற்றனர். தர்காவை மூன்று முறை வலம் வந்த பின், தர்கா வாசலில் வைக்கப்பட்டது. யாதவர் மற்றும் முத்தரையர் சமூகத்தினர் சந்தனக்கூட்டை இழுத்து வந்தனர். ஊர்வலத்தில் ஆதி திராவிட சமூகத்தினர் தீப்பந்தங்களை பிடித்தும், பிறைக் கொடி ஏந்தியும், பெண்கள் வழிநெடுகிலும் குலவையிட்டும் வந்தனர். முன்னதாக, பாதுஷா நாயகம் அடக்கஸ்தலத்தில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஹாஜி சலாஹூத்தீன் உலக மக்களின் அமைதிக்காக, தொழுகை நடத்தினார். பக்தர்களுக்கு சந்தனம் வழங்கப்பட்டது. வரும் 16 ல், கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் அம்சத் ஹூசைன்,செயலாளர் செய்யது பாரூக் ஆலிம் அரூஸி, உப தலைவர் செய்யது சிராஜ்தீன், முன்னாள் செயலாளர் துல்கருணை பாட்சா மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, ஆடி மாதம் முதல் கிருத்திகை விழா என்பதால், அதிகாலை 5:00 ... மேலும்
 
temple news
 திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
 பழநி; பழநி கோயிலில் ஆடி மாத கார்த்திகை, மற்றும் விடுமுறை நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழநி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு ... மேலும்
 
temple news
திண்டிவனம்; திண்டிவனம் கிடங்கல் பகுதியில் ஆடிகிருத்திகையை முன்னிட்டு, பக்தர்களுக்கு மிளகாய் பொடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar