இதென்ன அதிசயம்! கிருஷ்ணர் பிறந்த போது தேய்பிறை அஷ்டமி ஆயிற்றே! பவுர்ணமி போல நிலா ஜொலிக்கிறதே... எப்படி? கிருஷ்ணர் அவதரித்த போது கிரகங்கள் எல்லாம் சுபமான இடத்தில் இருந்தன. தேய்பிறை அஷ்டமியாக இருந்தாலும், பகவான் கிருஷ்ணர் சந்திர வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதால் வானில் பவுர்ணமி பிரகாசித்தது. அப்போது குழந்தை கிருஷ்ணர் கைகளில் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஏந்தியபடி மகாவிஷ்ணுவாக தன் பெற்றோர் வசுதேவர், தேவகிக்கு காட்சியளித்தார். கரிய மேகம் போன்ற அவர் மஞ்சள் நிற பட்டாடை, நவரத்தின ஆபரணங்கள் சூடியிருந்தார்.