படுக்கையில் கிடந்த முதியவரை பார்க்க உறவினர் ஒருவர் வந்தார். அவரிடம், ‘‘உங்களுக்கு எத்தனை வயது ஐயா எனக்கேட்டார். சிரித்த முகத்துடன், ‘‘எண்பது என்னும் இனிய வயதில் இருக்கிறேன்’’ என்றார். ‘‘ நோய்வாய்ப்பட்டு நடக்க முடியாமல் தவிக்கிறீர்கள்... இது எப்படி இனிமையாகும்?’’ என்றார் உறவினர். வாய்விட்டு சிரித்தபடியே, ‘‘ என் கால்கள் தள்ளாடுவது உண்மையே. கண்களும் மங்கிவிட்டன. உடலும் பலமற்று விட்டது என்றாலும், வாழ்வின் இனிய காலம் நெருங்குவதாக உணர்கிறேன். ஆண்டவரை காணும் நாளினை நெருங்குவதாக உணர்கிறேன். இந்த நினைவே இனிமையைத் தருகிறது’’ என்றார் முதியவர். உடலுக்கு எத்தனை வயதானாலும் எண்ணத்தில் துாய்மை இருந்தால் எல்லாம் நலமாக அமையும்.