மலை உச்சியில் இருந்து பாதாளத்தில் ஒருவர் குதித்தால் உயிர்பிரியும் வரை வேதனை. ஆனால் பாவம் எனும் பள்ளத்தில் விழுந்தால் வாழ்வு முழுவதும் வேதனையே. தவறு செய்தவர்கள் சிலர் மனசாட்சியின் உறுத்துதலால் காலம் எல்லாம் வேதனை அனுபவிப்பதை கண்கூடாக காணலாம். இதில் இருந்து தப்பிக்க நினைத்தால் ஒழுக்கமாக வாழ்வது தான் ஒரே வழி. இதை தவிர வேறு வழி எந்த வழியும் சரியானது அல்ல. நம் மனம் சறுக்கும் போதெல்லாம் தேவனுடைய கிருபை நம்மைத் தாங்குகிறது. ‘வழுவாதபடி காக்கவும்...’ என்ற பைபிள் வசனத்தை நினைவில் கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள். ஒழுக்கத்தை உயிராக மதியுங்கள்.