Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி சோமவாரம்; வேதபுரீஸ்வரருக்கு ... அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் புனித நீரால் சூரியனுக்கு அபிஷேகம் அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் புனித ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமைமிகு ஹிந்துவாக உணர்கிறேன்; பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்
எழுத்தின் அளவு:
பெருமைமிகு ஹிந்துவாக உணர்கிறேன்; பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்

பதிவு செய்த நாள்

11 செப்
2023
12:09

புதுடில்லி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், மனைவி அக் ஷதா மூர்த்தியுடன், புதுடில்லியில் உள்ள சுவாமி நாராயண் அக் ஷர்தாம் கோவிலில் நேற்று தரிசனம் செய்தார்.

ஜி - 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், மனைவி அக் ஷதா மூர்த்தியுடன் புதுடில்லி வந்தார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக இந்தியா வந்துஉள்ளார். புதுடில்லியில் நேற்று முன்தினம் நடந்த, ஜி - 20 உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டு நேற்று அதிகாலையில், சுவாமி நாராயண் அக் ஷர்தாம் கோவிலுக்கு, ரிஷி சுனக் மனைவியுடன் வந்தார். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. எனவே, கோவிலின் முகப்பு பகுதியில் இருந்து குடை பிடித்தபடி இருவரும் வெறுங்காலுடன் நடந்து வந்தனர். அவர்களுடன், பிரிட்டனில் உள்ள சுவாமி நாராயன் கோவில் அறக்கட்டளையின் அறங்காவலர் மற்றும் லண்டனில் உள்ள சுவாமி நாராயண் கோவில் உறுப்பினர் உள்ளிட்டோர் வந்தனர். கோவிலில் உள்ள சுவாமி நாராயண் தங்க விக்கிரகத்துக்கு ரிஷி சுனக்கும், அவரது மனைவியும் மலர்களால் அர்ச்சனை செய்து, தீப ஆராதனையில் பங்கேற்றனர். பின், சீதா ராமன், ராதாகிருஷ்ணன், லட்சுமி நாராயணன், சிவன் - பார்வதி விக்கிரகங்களை வழிபட்டனர். மொத்தம் 45 நிமிடங்கள் கோவிலில் இருந்து சுற்றிப் பார்த்த அவர்கள், கோவிலின் வரலாறு, சிற்பக்கலைகளின் சிறப்புகளை கேட்டறிந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில், பிரிட்டன் பிரதமருக்கும், அவரது மனைவிக்கும் அக் ஷர்தாம் கோவிலின் மாதிரி வடிவம், சலவைக் கற்களால் செய்யப்பட்ட யானை மற்றும் மயில் சிற்பங்கள் பரிசளிக்கப்பட்டன. அக் ஷதா மூர்த்தி, இன் போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தியின் மகள். இந்தியாவில் இருந்து துவங்கிய என் வேர்கள் குறித்தும், இந்தியாவுடனான என் தொடர்புகள் குறித்தும் பெருமை அடைகிறேன். இந்த தருணத்தில் பெருமைமிகு ஹிந்துவாக உணர்கிறேன். இந்த நாட்டுடனும், இந்திய மக்களுடனும் என் உறவு எப்போதும் தொடரும். ரிஷி சுனக், பிரிட்டன் பிரதமர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கார்த்திகை திருவிழா தமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் ஒன்று. இன்று வீடுகளில் தீபமேற்றி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, கோவில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழாவில் நேற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது.இன்று ... மேலும்
 
temple news
மதுரை : ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar