Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகத்தை விழித்தெழ வைத்த பாரத சனாதன ... திருச்செந்துாரில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்; அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் திருச்செந்துாரில் முருகனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் கும்பாபிஷேகங்கள் விரைவில் புத்தகமாக வெளியீடு
எழுத்தின் அளவு:
கோவில் கும்பாபிஷேகங்கள் விரைவில் புத்தகமாக வெளியீடு

பதிவு செய்த நாள்

11 செப்
2023
01:09

சென்னை: தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 1,030 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது. அது தொடர்பான புகைப்படங்கள் அடங்கிய புத்தகம் விரைவில் வெளியிடப்படும், என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், 1,000வது கோவில் கும்பாபிஷேக விழா, சென்னை மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று காலை நடந்தது. இதில், அமைச்சர் சேகர்பாபு, எம்.எல்.ஏ., கருணாநிதி, கவுமார மடம் சிரவை ஆதீனம், கோவை குமரகுருபர சாமிகள், திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் 18வது குருமகா சன்னிதானம் தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அத்துடன், தமிழகம் முழுதும் மேலும், 30 கோவில்களிலும் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதுகுறித்து, அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில், 18 ஆண்டுகளாக நடந்து வந்த திருப்பணிகளை முடித்து, 400 ஆண்டுகளுக்கு பின், அக்கோவிலில் கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டு உள்ளது.

புகைப்படங்கள்; கடந்த நிதியாண்டியில், 140 கோடி ரூபாயில், 1,000 ஆண்டுகள் பழமையான, 113 கோவில்களிலும்; இந்த நிதியாண்டில், 160 கோடி ரூபாயில், 84 திருக்கோவில்களிலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. சென்னை காசி விஸ்வநாதர் கோவிலில் திருப்பணிகள் அனைத்தும், இந்த ஆட்சியில் தான் நடந்து, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 1,030 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் அடங்கிய புத்தகம் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 
temple news
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.திருவாரூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில், திருநாளைப்போவார் என்கிற ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரமமோற்சவத்தில் நடக்கும் தெப்பல் திருவிழாவை ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar