வேலுார் ஜலகண்டேஸ்வரர் கோவில் தங்க கொடிமரத்தை சுற்றி கண்ணாடி கூண்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11செப் 2023 03:09
வேலுார்: ஜலகண்டேஸ்வரர் கோவிலில், தங்க கொடிமரத்தை சுற்றி கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி நடக்கிறது. வேலுார் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில், கடந்த ஜூன் மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கோவில் புரனமைக்கப்பட்டது. அப்போது அம்மன் சன்னதி கொடிமரம், சுவாமி கொடிமரம், கலசங்களுக்கு தங்க தகடுகள் பதிக்கப்பட்டன. தங்க தேரும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிலையில் பக்தர்கள் அம்மன் சன்னதி கொடிமரம் மற்றும் சுவாமி கொடிமரத்தை கைகளால் தொட்டு வழிபடுகின்றனர். இதனால் கடந்த வாரம் அம்மன் சன்னதி கொடிமரத்தை சுற்றி கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து சுவாமி கொடிமரத்தை சுற்றியும், கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கூறுகையில், ‘பக்தர்கள் தங்க கொடிமரத்தை தொட்டு வழிபடுவதால், பாலீஷ் இழக்கும் நிலை ஏற்பட்டது. அதை தடுக்கும் வகையில் கொடிமரத்தை சுற்றி கண்ணாடி கூண்டு அமைக்கப்படுகிறது’ என்றனர்.