Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழை வேண்டி தர்மசாஸ்தா கோயிலில் ... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா;  திருச்செந்தூரில் ஆவணி தேரோட்டம் கோலாகலம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடுக்கடலில் நாயனாருக்கு காட்சியளித்த சிவன்.. நாகையில் தங்க மீன் விடும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
நடுக்கடலில் நாயனாருக்கு காட்சியளித்த சிவன்.. நாகையில் தங்க மீன் விடும் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

13 செப்
2023
10:09

நாகப்பட்டினம்: நாகையில் 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான், தேவியருடன் நடுக்கடலில் எழுந்தருளி காட்சியளித்த நாளை, நினைவு கூறும் வகையில் கடலில் தங்க மீன் விடும் நிகழ்ச்சி நடந்தது. நாகை, நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் பிறந்தவர் அதிபத்த நாயனார். சிவபெருமான் மீது கொண்ட பக்தியினால், கடலில் மீன் பிடிக்க செல்லும் போதெல்லாம் ஒவ்வொரு நாளும் வலையில் சிக்கும் முதல் மீனை சிவ பெருமானை நினைத்து, வணங்கி கடலில் விட்டு விடுவது அதிபத்தரின் வழக்கம். அதிபத்தரின் பக்தியை சோதிக்க விரும்பிய சிவபெருமான் சில நாட்கள் அதிபத்த நாயனாரின் வலையில் மீன்கள் சிக்காமல் செய்தார்.

இதனால் அதிபத்த நாயனாரின் குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. சில நாட்கள் கழித்து வறுமையில் வாடிய, அதிபத்த நாயனாரின் வலையில் நாள்தோறும் ஒரு மீன் மட்டுமே கிடைக்கும் படி சிவபெருமான் செய்துள்ளார். வறுமையில் வாடிய நிலையிலும் வலையில் சிக்கும் ஒரு மீனையும், இறைவனை நினைத்து கடலில் விட்டு விட்டு வெறுங்கையுடன் அதிபத்த நாபனார் வீட்டிற்கு திரும்பியுள்ளார். குடும்பத்தினர் வயிற்றுக்கு உணவில்லாமல் வறுமையில் வாடிய நிலையில்,ஒரு நாள் அதிபத்த நாயனாரின் வலையில் நவரத்தினங்களால் ஆன தங்க மீன் சிக்கியுள்ளது. தங்க மீனாயினும் தயங்காது" இது அருட் கூத்தாடும் எம் பெருமான் சிவனுக்கு உரியது என மகிழ்ச்சியோடு கடலில் விட்டுள்ளார். அதிபத்த நாயனாரின் தீவிர பக்தியை மெச்சிய சிவபெருமான், நடுக்கடலில் இடப வாகனத்தில் தேவியருடன் எழுந்தருளி அதிபத்த நாயனாருக்கு காட்சியளித்தார்.

அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான் காட்சியளித்த நாளை நினைவு கூறும் வகையில், நேற்று மாலை, நம்பியார் நகர், புதிய ஒளி மாரியம்மன் கோவிலில், சிவபெருமான் தேவியருடன் எழுந்தருளினார் நம்பியார் நகர் மீனவ கிராம மக்கள் மேளதாளம், மங்கள வாத்தியங்கள் முழங்க, வானவேடிக்கையுடன், சிவபெருமானையும், அதிபத்த நாயனாரையும், நாகை, புதிய கடற்கரைக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். கடற்கரையில் ஆரிய நாட்டுத் தெரு கிராம மீனவர்கள், சீர் வரிசையுடன் வரவேற்றனர். அங்கு சிவபெருமான், அதிபத்த நாயனாருக்கு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது. பின் அதிபத்த நாயனார் படகில் சென்று கடலில் தங்க மீன் விடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, திருப்பதி கோவிலிருந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதர் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை இன்று ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மாத 3வது சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேக ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், வளர்பிறை ஏகாதசி விழா ... மேலும்
 
temple news
தேனி; வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. அதற்காக இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், - கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar