சிவகங்கை மன்னர் பட்டம் ஏற்ற கவுரி பீடத்தில் வெள்ளி வாள் வைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2023 10:09
சிவகங்கை: சிவகங்கை அருகே சோழபுரம் அருண் மொழிநாதர் சமேத அறம் வளர்த்த நாயகி கோயிலில் உள்ள கவுரிபீடத்தில் 2 வெள்ளி வாள் வைத்து தேவஸ்தானம் சார்பில் சிறப்பு பூஜை செய்தனர். சோழபுரத்தில் உள்ள தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் சிவகங்கை மன்னர்கள் பட்டம் ஏற்கும் கவுரிபீடம் உள்ளது. இக் கோயிலுக்கு பட்டத்து கோயில் எனவும் பெயர் உண்டு. ஆவணி அமாவாசை அன்று சிவகங்கை தேவஸ்தானம் சார்பில் 2 வெள்ளி வாள்களை கவுரி பீடத்தில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்துவர். நேற்று மாலை 5:00 மணிக்கு சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமையில் வெள்ளி வாள் வைத்து வழிபாடு, பூஜை நடந்தது. இந்த வெள்ளி வாள் சிவகங்கை அரண்மனையில் நடக்கும் நவராத்திரி 8ம் நாள் விழாவில் ராஜேஸ்வரி அம்மன் கோயிலில் வைத்து வழிபடுவர். இந்த பூஜையில் மன்னர் பள்ளிகளின் செயலாளர் குமரகுரு, கோயில் கண்காணிப்பாளர்கள் சேவற்கொடியோன், வேல்முருகன் பங்கேற்றனர். கோயில் குருக்கள் ஆத்மநாபன் தலைமையில் பூஜை செய்தனர்.