திருநெல்வேலியில் கோயில் சிலை அடியோடு உடைப்பு போலீஸ் விசாரணை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2023 11:09
திருநெல்வேலி: திருநெல்வேலி ஜங்ஷன் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள கோயில் சிலை அடியோடு உடைக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
திருநெல்வேலி ஜங்ஷன் தைப்பூச மண்டபம் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் சுடலை ஆண்டவர் கோயில் உள்ளது. பாலசுப்பிரமணியன் என்பவர் பூஜை மேற்கொள்கிறார். நேற்று காலையில் கோயிலுக்கு வந்தபோது மாயாண்டி சிலை அடியோடு பெயர்த்து தரையில் தள்ளப்பட்டு கிடந்தது. வழக்கமாக கோயில் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் போது அதன் அடியில் வைக்கப்படும் தங்கம் உள்ளிட்ட பொருட்களுக்காக சிலை உடைக்கப்பட்டதா என போலீசார் சிசிடிவி காமிரா காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.