பதிவு செய்த நாள்
15
செப்
2023
11:09
ஆழ்வார்திருநகரி: திருக்கோளூர், வைத்தமாநிதி பெருமாள் கோயிலில், ஆவணித்திருவிழா கருடசேவை நடந்தது. நவதிருப்பதி கோயில்களில், செவ்வாய் ஸ்தலமாக ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள, திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில் திகழ்கிறது. இந்த கோயிலில், ஆவணித்திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, நடைபெற்று வருகிறது. கொடியேற்றத்தினைத் தொடர்ந்து, திருவிழா நாட்களில் தினமும் வைத்தமாநிதி பெருமாள் தோளுக்கினியான், இந்திர வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், அன்ன வாகனம், யானை வாகன பல்லக்கில் மாடவீதி எழுந்தருளும் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, கருடசேவை சிறப்பாக நடைபெற்றது. இதில் கருடவாகனத்தில் சுவாமியும், அன்னவாகனத்தில் மதுரகவி ஆழ்வாரும் எழுந்தருளி எதிர்சேவை சாதித்து, பக்தர்களுக்கு காட்சி கொடுத்து திருவிதி உலா நடைபெற்றது. நிகழ்ச்சியில், கோயில் ஸ்தலத்தார்திருவாய்மொழி பிள்ளை திருவேங்கடாச்சாரியார் சுவாமிகள், சடகோபன் சுவாமிகள், முன்னாள் அறங்காவல் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அஜித் மற்றும் பக்தர்கள், ஊர்பொதுமக்கள் செய்துவருகின்றனர்.