சேதுபதி மன்னர்கள் கட்டிய பழமை வாய்ந்த சிவன் கோவிலுக்கு சிக்கல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2023 11:09
சென்னை: சேதுபதி மன்னர்கள் கட்டிய சிவன் கோவில், மரம் வளர்ந்து அழியும் நிலையில் உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் அருகே, குறண்டி கிராமத்தில் கோரக்கநாதர் கோவில் என்ற சிவன் கோவில் உள்ளது. 17, 18ம் நுாற்றாண்டுகளில் சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோவில் தற்போது தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. முழுதும் கருங்கல்லால் கட்டப்பட்டு, செங்கல் விமானத்தால் அழகூட்டப்பட்ட இந்த கோவில் தற்போதும் வழிபாட்டில் உள்ளது. இதன் விமானம் மற்றும் மதில் சுவர் பகுதிகளில், 50 ஆண்டுகளாக செடிகள் வளர்ந்து, அவற்றின் வேர்கள் அடிப்பகுதி வரை சென்றுள்ளன. இதனால், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் சிதையும் நிலையில் உள்ளது. இதை, மத்திய தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்துள்ளனர். எனவே, இக்கோவிலை அறநிலையத் துறை பழமை மாறாமல் புதுப்பிக்குமா என்ற எதிர்பார்ப்பில் சிவனடியார்களும், பக்தர்களும் உள்ளனர்.