Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேதுபதி மன்னர்கள் கட்டிய பழமை ... திருப்பதி பிரம்மோற்சவம்; நாளை மறுநாள் முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம் திருப்பதி பிரம்மோற்சவம்; நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகம் உள்ளவரை சனாதன தர்மம் நிலைத்து நிற்கும்
எழுத்தின் அளவு:
உலகம் உள்ளவரை சனாதன தர்மம் நிலைத்து நிற்கும்

பதிவு செய்த நாள்

15 செப்
2023
12:09

தி.நகர்: ‘‘உயிரைக் கொடுத்தும், சனாதன தர்மத்தை காக்க, தமிழ்நாடு பிராமண சமாஜம் தயாராக உள்ளது,’’ என, பிராமண சமாஜ பொதுக்குழுவில், அதன் தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் பேசினார். தமிழ்நாடு பிராமண சமாஜத்தின் மாநில பிரதிநிதித்துவ
பொதுக்குழு கூட்டம், சமாஜ தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் தலைமையில், தி.நகர் சுந்தரம் தெருவிலுள்ள குருபாலாஜி திருமண மண்டபத்தில் நடந்தது. இக்கூட்டத்தில், தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவும், இதற்கான சான்றிதழை தாமதமில்லாமல் வழங்கவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக கோவில்களில் பணி செய்யும் அர்ச்சகர்களின் முன்னேற்றத்திற்காக, நலவாரியம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட, 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் பேசியதாவது: நம் பிராமண சமாஜம், சமூக நலன் சார்ந்த அனைத்து பொது விஷயங்களுக்காக என்றும் பாடுபடும். இந்த சமாஜத்தில், 12,000 உறுப்பினர்கள் உள்ளனர். விரைவில்அனைத்து மாவட்டங்களிலும், நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடத்தப்படும். மேலும், வரும் 2025ம் ஆண்டு மிகப்பெரிய அளவில் மாநில மாநாடு நடத்தப்படும். தமிழகத்தில் சிலர், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டுமென பேசி வருகின்றனர். அதற்காக எதிர்ப்பு மாநாடும் நடத்துகின்றனர். உயிரைக் கொடுத்தும் சனாதன தர்மத்தைகாக்க, தமிழ்நாடு பிராமண சமாஜம் தயாராக உள்ளது. உலகம் உள்ளவரை, சனாதன தர்மம் நிலைத்து நிற்கும். யாராலும் எதுவும் செய்ய முடியாது. நாம் யாருக்காகவும் எதற்காகவும் பயப்பட மாட்டோம். விநாயகர் சதுர்த்தியன்று நாம் அனைவரும், நம் வீட்டில் கணபதி ஹோமம் நடத்தவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத ... மேலும்
 
temple news
மதுரை;  தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, டவுன்ஹால் என். எச் .ரோடு சந்திப்பில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவிலில் புரட்டாசி முதல் ... மேலும்
 
temple news
கடலுார்; கடலுார் கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்; கோயில் நகரமாம் குச்சனூரில் அடிப்படை வசதிகளின்றி கோயிலிற்கு வரும் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar