பதிவு செய்த நாள்
15
செப்
2023
12:09
சென்னை: திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, நாளை மறுநாள் முதல், 30ம் தேதி வரை, தமிழகத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
திருப்பதி தேவஸ்தானத்தில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இரண்டு பிரம்மோற்சவங்கள் வருவது வழக்கம். அந்த வகையில், நாளை மறுதினம் முதல், 30ம் தேதி வரையும்; அடுத்தமாதம், 15ம் தேதி முதல், 23ம் தேதி வரையும் பிரம்மோற்சவ விழாக்கள் நடக்க உள்ளன. இதற்காக, தமிழகத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து, அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: திருப்பதிக்கு நாளை மறுதினம் முதல் 30ம் தேதி வரை, சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்களுக்கு, www.tnstc.in எனும் இணையதளம் மற்றும் tnstc மொபைல் போன் செயலி வாயிலாக முன்பதிவு செய்தும் பயணிக்கலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுஉள்ளது.