50 லட்சம் நாணயங்கள், பல கோடி ரூபாய்களில் உருவாகும் விநாயகர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2023 12:09
பெங்களூரு: ஸ்ரீ சத்யகணபதி ஷீரடி சாய் டிரஸ்ட் சார்பில், நாணயங்கள், ரூபாய் நோட்டுகளில் விநாயகர் உருவம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை, வரும் 18ம் தேதி நாடு முழுதும் கொண்டாடப்பட உள்ளது. புதுமையாக கொண்டாட பெங்களூரு ஜே .பி. நகரில் உள்ள , ஸ்ரீ சத்யகணபதி ஷீரடி சாய் டிரஸ்ட் திட்டமிட்டு உள்ளது. அதாவது 50 லட்சம் ரூபாய் நாணயங்கள், பல கோடி ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி, விநாயகர் உருவத்தை வடிவமைக்க நினைத்துள்ளனர். டிரஸ்ட்டைசேர்ந்த ராம் மோகன் ராஜ் கூறியதாவது: இந்த ஆண்டு நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி விநாயகர் உருவங்களை, வடிவமைக்க திட்டமிட்டு உள்ளோம். இப்பணியில் 150 பேர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். விநாயகர் உருவங்களை வடிவமைப்பதற்காக, பொதுமக்களிடம் இருந்து நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை நன்கொடையாக பெற்று வருகிறோம். வரும் 18ம்தேதி, சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.