பதிவு செய்த நாள்
15
செப்
2023
12:09
மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தேவார பாடல் பெற்ற திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சட்டநாதருக்கு சிறப்பு ஹோமங்கள் செய்து வழிபட்டால், நீதிமன்ற வழக்குகள் தொடர்பான பிரச்னைகள் நீங்கும் என்பது ஐதீகம். காசிக்கு இணையான பைரவ ஷேத்திரமாக, இக்கோவில் விளங்குகிறது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலுக்கு நேற்று தி.மு.க., மூத்த அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம் வந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள் தங்களின் பெயர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர் களை சொல்லி சங்கல்பம் செய்து, சிறப்பு வழிபாடு நடத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.
இது குறித்து அமைச்சர் நேருவிடம் செய்தியாளர்கள் கேட்டதிற்கு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் முதல்வராக ஸ்டாலினே தொடர வேண்டும் எனவும், இந்த இயக்கம் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டியதாக கூறினார்.