பதிவு செய்த நாள்
15
செப்
2023
01:09
அனுப்பர்பாளையம்: திருப்பூர், பி.என் ரோடு அண்ணா நகர், தியாகி குமரன் காலனியில் அருள்மிகு ஸ்ரீ ராஜகாளியம்மன், ஸ்ரீ முத்தாரம்மன், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ பிரம்ம சக்தி, ஸ்ரீ சுடலை மகாராஜா திருக்கோவில் அமைந்துள்ளது.
கோவில் 17 ம் ஆண்டு பொங்கல் விழா கடந்த 13 ம் தேதி முதல், தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் 13 ம் தேதி காலை மகா கணபதி ஹோமம், கலச பூஜை, தொடர்ந்து, பொரி சாத்துதல், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று14 ம் தேதி மாலை 6:00 மணிக்கு படைக்கலம் கொண்டு வருதல், அம்மன் அழைத்தல், நிகழ்ச்சியை தொடர்ந்து, இரவு பல்வேறு பகுதிகளில் இருந்து 500 க்கு மேற்பட்ட பெண் பக்தர்கள் முளைப்பாரியை எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து சுமாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. சுடலை மகாராஜா சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை 15 ம் தேதி காலை பக்தர்கள் தீர்த்தகுடம் எடுத்து வருதல், இரவு சுடலை மகாராஜா, சத்ராதி முண்டக சுவாமி, ராஜ காளியம்மன், முத்தாரம்மன், பேச்சியம்மன், மிரம்மசக்தி ஆகிய தெய்வங்களுக்கு படையல் பூஜை மற்றும் அலங்கார பூஜை நடைபெறுகிறது. நாளை மறுநாள் 16 ம் தேதி காலை பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து அம்மனுக்கு பொங்கல் வைத்தல், 17 ந் தேதி காலை 11:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா வருதல், மஞ்சள் நீராடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைப்பெறுகிறது.