கட்டுப்பாடுகளால் விற்பனைக்கான விநாயகர் சிலைகள் குறைந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2023 03:09
உளுந்தூர்பேட்டை: விநாயகர் சிலைகள் வைப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிபட்டதால் குறைந்த எண்ணிக்கையில் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். பின்னர் ஓரிரு நாட்களுக்கு பிறகு விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பர். இதனால் விநாயகர் சிலைகளின் விற்பனை அதிகமாக இருந்து வந்தது. விநாயகர் சிலைகள் விலை உயர்ந்தாலும். விற்பனையும் அதிகமானதால் விநாயகர் சிலைகளை செய்யும் தொழிலாளர்களுக்கு லாபம் கிடைத்து வேலை வாய்ப்பும் கிடைத்தது. இதற்காக விநாயகர் சிலைகள் ஒரிரு வாரங்களுக்கு முன்பாக செய்யப்பட்டு விற்பனைக்காக தயார்படுத்தி வைத்திருப்பர். ஆனால் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது இது விநாயகர் செய்யும் தொழிலாளர்களிடையேயும், பக்தர்களிடையேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மெகா சைஸ் விநாயகர் சிலைகளை வாங்குவதற்காக முன் கூட்டியே ஆர்டர் செய்வதும் மிகவும் குறைந்தது. ஆர்டர்கள் இல்லாததால் விநாயகர் சிலைகள் குறைந்த எண்ணிக்கையிலேயே செய்து விற்பனைக்காக வைத்துள்ளனர். இது குறித்து கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் கூறுகையில், விநாயகர் சிலைகள் வைப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாலும், விநாயகர் சிலைகள் தயாரிப்புக்கான உபகரணங்களின் விலைகள் அதிகரித்துள்ளது. மேலும் விநாயகர் சிலைகளை வாங்குவதற்கு முன்கூட்டியே ஆர்டர்கள் அதிக அளவில் எதுவும் வரவில்லை. இதனால் விநாயகர் சிலைகளை குறைந்த அளவே தயார் செய்து, குறைந்த அளவே விற்பனைக்காக கொண்டு வந்துள்ளோம். இத்தொழிலை நம்பியுள்ள எங்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்ததோடு வருமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.