உலக நன்மை வேண்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் அமாவாசை யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2023 05:09
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை பூஜையையொட்டி உலக நன்மை வேண்டி பிரார்த்தனை மற்றும் யாக பூஜை நடந்தது.
கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் அமாவாசை பூஜையில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அம்மன் விஸ்வரூபமாக அஸ்வாரூட வாராகி அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து உலக நன்மை வேண்டி யாக பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய வேண்டுதல்களை அம்பாளிடம் சங்கல்பம் மூலமாக வைத்தனர். எண்ணிய காரியம் நிறைவேறிய பக்தர்கள் நன்றி பிரார்த்தனைகள் செய்தனர். இந்த பூஜையில் நத்தம் சுற்று வட்டார பகுதி மக்களும் மதுரை,சிவகங்கை, திருச்சி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவினை வாராகி அறக்கட்டளை தலைவர் சஞ்சீவி சாமிகள் நடத்தி வைத்தார். வாராகி அறக்கட்டளை சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.