சரவணம்பட்டி: கோவை சரவணம்பட்டியில் உள்ள சிரவணமாபுரீசுவரர் 126 வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்.22 வரை ஒரு வாரம் நடக்கிறது. கோவை சரவணம்பட்டியில் உள்ள சிரவணமாபுரீசுவரர் கோயிலில் 126 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. பத்து நாட்கள் வரை கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா, கடந்த செப்.13ல் கொடியேற்றத்துடன் இவங்கியது. வரும் 22 வரை நடக்கிறது. ஒவ்வொரு நாளும் மாலை 7.00 மணிக்கு திருச்சுற்றுலா நடக்கிறது. செப்.19ல், அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு வேள்வி நடக்கிறது. காலை 5.00 மணிக்கு பொங்கல் வைத்தல், அபிஷேகம் நடக்கிறது. மாலை 4.30 மணி அளவில் திருத்தேர் திரு ஊர் உலா நடக்கிறது. சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள், சாந்தலிங்க மருதாசல அடிகள் , வாராஹி மணிகண்ட சுவாமிகள் தேர்த்திரு விழாவை முன்னின்று நடத்துகின்றனர்.