Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவிலில் ... உத்தரகண்ட் மதரஸாக்களில் மாணவர்களுக்கு சமஸ்கிருதம் கட்டாயமக்கப்படும்; வக்பு வாரிய தலைவர் உத்தரகண்ட் மதரஸாக்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் கஜமுக சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் கஜமுக சூரசம்ஹாரம்

பதிவு செய்த நாள்

16 செப்
2023
10:09

பிள்ளையார்பட்டி: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 6ம் நாளான நேற்று கஜமுகசூரசம்ஹாரம் நடந்தது.
கற்பக விநாயகர் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் சதுர்த்திப் பெருவிழா செப்.,10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலையில் வெள்ளி கேடகத்தில் உற்ஸவர் புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது. நேற்று மாலை 4:30 மணிக்கு மூலவர் சன்னதியில் மூலவர் பாதத்தில்தந்தம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் துவங்கின. பின்னர் மாலை 5:30 மணிக்கு பூஜை நிறைவடைந்து கிழக்கு கோபுர மண்டபத்தில் வெள்ளிக் கேடகத்தில் உற்ஸவ விநாயகர் யானை வாகனத்தில் எழுந்தருளினார். அவரிடம் மூலவர் சன்னதியிலிருந்து பூஜிக்கப்பட்ட தந்தம் வழங்கப்பட்டது. பின்னர் யானை வாகனத்தில் உற்ஸவர் புறப்பாடாகி யானை முகத்துடன் கிழக்கு கோபுர வாசலில் உலாவிக் கொண்டிருந்த கஜமுக சூரனை எதிர் கொண்டார். தொடர்ந்து சூரனின் தலையை வதம் செய்ய வேறு தலைகளை மாற்றிக் கொண்ட சூரனை எதிர் கொண்டார் உற்ஸவர். கோயில் குளத்தின் வடக்குபடித்துறை அருகே சூரனை தந்தத்தால் மும்முறை கழுத்தில் குத்தி தலையை கொய்தார். செப்.,18 காலை சுவாமி தேருக்கு எழுந்தருளலும், மாலை தேர் வடம் பிடித்தலும் நடைபெறும். அன்று ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தை மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை பக்தர்கள் தரிசிக்கலாம். செப்.,19 காலை கோயில் திருக்குளத்தில் அங்குசத்தேவருக்கு விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி நடைபெறும். மதியம் 2:00 மணிக்கு மூலவருக்கு முக்கூருணி மோதகம் படையலிடப்படும். இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், டிசம்பரில் நடக்கும் சேவைகளுக்கான முன்பதிவு தேதி ... மேலும்
 
temple news
தென்காசி: பிரசித்தி பெற்ற ஆலங்குளம் பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி கடைசி மற்றும் ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் நகரில் ஓணம் பண்டிகையை ஒட்டி நடந்த புலிக்களி நடன நிகழ்ச்சி வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்த விரத உற்சவம் நடந்தது. எமனேஸ்வரம் ... மேலும்
 
temple news
சென்னை; ‘தினமலர்’ நாளிதழ் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ சார்பில் நடத்தப்படும், ‘அ’னா... ‘ஆ’வன்னா... அரிச்சுவடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar