பஞ்சமியில் பராசக்தியின் படை தலைவி வாராஹியை வழிபட வெற்றி நிச்சயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20செப் 2023 10:09
ஒவ்வொருவரும் அம்பிகையைப் பூஜை செய்வது பூர்வ புண்ணிய பலத்தினால் வருவது. எதிலும் சக்தியே பிரகாசிக்கிறது. அந்த சக்தியை ஒரு இடத்தில் நிறுத்தி அதனுடைய பேரருளை பக்தி மார்க்கமாக வாராஹி அம்பாள் என்று நினைவில் வைத்து அம்பாளை வழிபட வேண்டும். அவ்வாறு வாராஹியை வழிபட சகலவிதமான காரியங்களும் நொடியில் சித்தியாகும். ஆதிசக்தியாகிய பராசக்தியின் படைக்கு சேனாதிபதியாக வாராஹி தேவி அவதரித்தாள். ஆகையால் நாம் வாராஹியை அன்றாடம் வழிபாடு செய்ய வேண்டும். இன்று பஞ்சமியில் வழிபட எடுத்த செயல் அனைத்தும் வெற்றியாகும்.