லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்த மங்கல பொருள், திருக்குடைகள் திருப்பதி வந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21செப் 2023 04:09
திருப்பதி: திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோற்சவத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்த மங்கல பொருள்; வெண்பட்டுக் குடைகள் திருப்பதி வந்தது.
ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோற்சவத்திற்காக, ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில், சென்னையில் 11 திருக்குடைகள் ஊர்வலம் செப்., 16ல் துவங்கியது. ஊர்வல துவக்க விழாவில், ஹிந்து தர்மார்த்த சமிதியின் நிர்வாக அறங்காவலர் வேதாந்தம்ஜி தலைமை வகித்தார். அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி வரவேற்றார். ரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் மவுனகுரு தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை கமலக்கண்ணியம்மன் திருக்கோவில் தவத்திரு சச்சிதானந்தா சுவாமிகள் ஆகியோர் பங்கேற்று ஆசி வழங்கி, திருக்குடை ஊர்வலத்தை துவங்கி வைத்தனர். சென்னகேசவ பெருமாள் கோவிலில் துவங்கிய ஊர்வலம் லட்சக்கணக்கான பக்தர்களின் தரிசனத்திற்கு பின் இன்று செப்., 21ம் தேதி காலையில் திருக்குடைகள் திருமலை திருப்பதியை சென்றடைந்தது. அங்கு ஒன்பது குடைகள் சுவாமிக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. எல்லாரும் எல்லா நலன்களும் பெறவும், அமைதியும், ஆனந்தமும் நிலவவும், பல ஊர்களைக் கடந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று சமர்ப்பிக்க பட்டது. நிகழ்சியில் ஹிந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி, நிர்வாக அறங்காவலர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.