Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி ... வத்திராயிருப்பு முத்தாலம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரதம் புராதன மகிமை பொருந்திய ஒரு தேசமாக விளங்கி வருகிறது; கவர்னர் ரவி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2023
06:09

காஞ்சிபுரம்-”சமூக கலாசாரம் மற்றும் ஆன்மிக வளர்ச்சி தான் பாரதத்தின் முன்னேற்றம்,” என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.

காஞ்சி சங்கரமடத்தின் பீடாதிபதியாக, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொறுப்பேற்று, 50 ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி, ஏனாத்துாரில் உள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலை வளாகத்தில், 2004ல், 50 அடி உயர ஸ்துாபி நிறுவப்பட்டது. தற்போது, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 89வது ஆண்டு ஜெயந்தி விழா கொண்டாடப்படும் நிலையில், இந்த ஸ்துாபி சமீபத்தில் சீரமைக்கப்பட்டது. இந்த ஸ்துாபியை திறந்து வைத்து, தமிழக கவர்னர் ரவி பேசியதாவது: இந்த மாபெரும் தேசமான பாரதத்தை கட்டி எழுப்பியதில், ஆதி சங்கராச்சாரியாரின் பங்கு மகத்தானது. சனாதனம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை விளக்கி, பாரதத்தின் புராதன மகிமை பொருந்திய ஒரு தேசமாக விளங்கி வருகிறது. பாரதத்தின் வேர்கள் மிகவும் ஆழமானவை. ’வசுவதை குடும்பம்’ அதாவது, உலகம் அனைத்தும் ஒரே குடும்பம் என்ற பரந்த கருத்து நம்மை வழி நடத்துகிறது. கொரோனா தொற்று பரவிய காலத்தில், நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை, 125 நாடுகளுக்கு இலவசமாக வினியோகித்தோம். மற்ற நாடுகள், தங்கள் லாபத்தை பற்றி கவலைப்படுகின்றன. பல்வேறு பிரச்னைகள், மோதல்கள், போர்கள் நடக்கும் இந்த உலகில், மீண்டும் விஸ்வ குருவாகி உலகிற்கு ஒளிகாட்ட, இதுவே நமக்கு சிறந்த வாய்ப்பு. சமூக கலாசாரம் மற்றும் ஆன்மிக முன்னேற்றம், பாரதத்தின் மொத்த வளர்ச்சியை நோக்கமாக உடையது. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், தமிழக கவர்னர் ரவியின் மனைவி லட்சுமி, பல்கலை துணை வேந்தர் ராகவன், நிர்வாக மேலாண்மை குழு உறுப்பினர் ஹிந்து ரவி மற்றும் பேராசிரியர்கள், மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், டிசம்பரில் நடக்கும் சேவைகளுக்கான முன்பதிவு தேதி ... மேலும்
 
temple news
தென்காசி: பிரசித்தி பெற்ற ஆலங்குளம் பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி கடைசி மற்றும் ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் நகரில் ஓணம் பண்டிகையை ஒட்டி நடந்த புலிக்களி நடன நிகழ்ச்சி வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்த விரத உற்சவம் நடந்தது. எமனேஸ்வரம் ... மேலும்
 
temple news
சென்னை; ‘தினமலர்’ நாளிதழ் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ சார்பில் நடத்தப்படும், ‘அ’னா... ‘ஆ’வன்னா... அரிச்சுவடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar