கீழடி: குந்தீ மாநகரம் என அழைக்கப்படும் கொந்தகை தெய்வநாயக பெருமாள் கோயிலில் வரும் 25ம் தேதி திங்கள் கிழமை காலை புரட்டாசி மாத கருட சேவை உற்சவம் நடைபெற உள்ளது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் உபகோயிலான கொந்தகை தெய்வநாயக பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத கருட சேவை வரும் திங்கள்கிழமை காலை ஒன்பது மணிக்கு நடைபெற உள்ளது. காலை ஒன்பது மணிக்கு விசேட திருமஞ்சனமும், காலை பத்து மணிக்கு தீபாராதனையும் பிரசாதம் வழங்குதலும் நடைபெறும், மாலை ஐந்து மணிக்கு தெய்வநாயக பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாக கருட வாகனத்தில் வீதியுலா வர உள்ளார். கருட சேவைக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் பக்தர்கள் செய்து வருகின்றனர்.