பதிவு செய்த நாள்
15
அக்
2012
11:10
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பு, அன்னை ரேணுகாம்பாள் கோவிலில், நவராத்திரி விழா, இன்று துவங்குகிறது.இன்று முதல், 24ம் தேதி வரை, தினமும் காலை, 9:00 மணிக்கு அபிஷேகம், மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெறும். இன்று துவங்கி, விநாயகர், காமாட்சி, பொட்டு அம்மன், சமயபுரம் மாரியம்மன், பனிலிங்கமூர்த்தி, ஆண்டாள், கருமாரியம்மன், அர்த்தநாரீஸ்வரர், சரஸ்வதி, துர்காதேவி அலங்காரத்தில் அம்மன் காட்சி தருவார்.