Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி சனி உற்சவம்; திணறியது ... சவுந்தரராஜப் பெருமாளை தரிசிக்க பால், தீர்த்த குடங்களுடன் பாதயாத்திரை வந்த பக்தர்கள் சவுந்தரராஜப் பெருமாளை தரிசிக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

30 செப்
2023
03:09

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமை விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.‌

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி சனிக்கிழமை விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை விழா, கடந்த மாதம், 16ம் தேதி துவங்கியது. இன்று புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை விழாவை முன்னிட்டு, அதிகாலை, 3:30 மணிக்கு கோவில் நடை திறந்து, மூலவர் அரங்கநாதருக்கு திருமஞ்சனம் நடந்தது. அதைத் தொடர்ந்து, 4:00 மணிக்கு, பக்தர்கள் வழிபாட்டுக்கு கோவில் திறக்கப்பட்டது. பின்பு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, உற்சவமூர்த்தி அரங்கநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அங்கு வேத பாராயணம், உபநிஷ அஷ்டோத்திரம் சேவிக்கப்பட்டது. பின்பு தீபாராதனை காண்பித்து, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

தாசர் வழிபாடு: கோவில் முன்பு ஏராளமான தாசர்கள் அமர்ந்திருந்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள், தாங்கள் கொண்டு வந்த அரிசி, பருப்பு காய்கறிகளை தாசர்களுக்கு படைத்தனர். தாசர்கள் சங்கு ஊதி, சேகண்டி அடித்து பூஜை செய்து, பக்தர்களுக்கு சிறிதளவு அரிசி பருப்பு பொருட்களை வழங்கினர். வீடுகளில் பொங்கல் வைத்து, விரதத்தை முடிக்க, பக்தர்கள் தாசர்களிடம் இருந்து, சிறிதளவு உணவு பொருட்களை, வீடுகளுக்கு பெற்றுச் சென்றனர். கோவிலில், குரு ஞான குருகுல பன்முக கல்வி நிலைய மாணவிகளின், பரதம், பாட்டு, இசை ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாட்டினை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி செய்திருந்தார். விழாவில் கோவில் ஸ்தலத்தார், அர்ச்சகர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் என, ஏராளமானோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத ... மேலும்
 
temple news
மதுரை;  தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, டவுன்ஹால் என். எச் .ரோடு சந்திப்பில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவிலில் புரட்டாசி முதல் ... மேலும்
 
temple news
கடலுார்; கடலுார் கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்; கோயில் நகரமாம் குச்சனூரில் அடிப்படை வசதிகளின்றி கோயிலிற்கு வரும் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar