செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பாவாடை உற்சவம் நடந்தது.
செஞ்சி பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனமும், திருப்பாவாடை உற்சவமும் நடந்தது. இதில் பக்தர்களுக்கான பிரசாதங்கள் அனைத்தும் ரங்கநாதருக்கு சிறப்பு படையலிட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி கோட்டை வெங்கட்ராமணர் கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் செய்தனர். இதே போல் செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு அலங்காரம் செய்தனர்.