பதிவு செய்த நாள்
30
செப்
2023
05:09
அனுப்பர்பாளையம்: திருப்பூர் மக்களின் குடும்ப நலனுக்காகவும், தொழில் சிறக்கவும், மழை மற்றும் விவசாயம் செழிக்கவும்
திருப்பூர், திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் அமைந்துள்ள ஏ கிராண்ட் திருமண மஹால் சார்பில், ஸ்ரீ ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி, சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் 9 ம் ஆண்டு திருகல்யாண உத்ஸவ விழா நேற்று ஏ கிராண்ட் திருமண மஹாலில் நடைபெற்றது. விழாவையொட்டி, காலை 6:00 மணிக்கு கோ பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 7:00 மணிக்கு அநூக்ஞை, ஆச்சரியவருனம் விஷ்வச்ஸேந ஆராதனம், புன்னியாகவாசனம், மஹா கணபதிஹேமம், மஹா சுதர்சன ஹேமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம், தன்வந்தரி ஹோமம், பூர்ணாஹீதி உள்ளிட்டவை நடைபெற்றது. 8:00 மணிக்கு திருகல்யாண உற்சவம் பெருமாள் புறப்பாடு, மாலை மாற்றுதல், ஊஞ்சல் ரட்சபந்தனம், கன்னிகா தானம், லக்னாஷ்டகம் திருமாங்கல்ய பூஜை, திருமாங்கல்ய தாரணம், மஹா தீபாராதனை, மஹா கைவைத்தியம், சாற்றுமறை தீர்த்த பிரசாதம் வினியோகம், ஆசிர்வாதம், மங்கள ஆரத்தி ஆகியவை நடைபெற்றது. திருக்கல்யாண உத்ஸவத்திற்கு அண்ணாமலையார் சார்பாக திருவண்ணாமலை அருணாசல ஈஸ்வரர் குமார குருக்கள் சீர் கொண்டு வந்தார். விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கே.ஜி.எஸ். குடும்பத்தினர் செய்து இருந்தனர்.