அமிர்தசரஸ் பொற்கோயிலில் ராகுல் வழிபாடு; பாத்திரம் கழுவி சேவை செய்தார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02அக் 2023 04:10
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள அமிர்தசரஸ் பொற்கோயிலில் இன்று(அக்.,02) பாத்திரம் கழுவி சேவை செய்து காங்., எம்.பி ராகுல் வழிபட்டார். இது குறித்து புகைப்படங்களை ராகுல் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். பஞ்சாப் மாநில அமிர்தசரஸ் பொற்கோவிலில் காங்., எம்.பி ராகுல் தனது ஆதரவாளர்களுடன் சென்று வழிபாடு நடத்தினார். சீக்கியர்களின் புனிதமான இக்கோயில், குருநானக் 1502ல் இன்ர்ஹ் மண்ணில் பாதம் பதித்த இடத்தில் கட்டப்பட்டது. சீக்கிய நான்காவது குருவாகிய ராம்தாஸ், அமிர்தசரசில் ஒரு குடியிருப்பை உருவாக்கினார். 18ம் நூற்றாண்டில் ஆப்கானியர்கள் பல முறை குருத்வாராவை தாக்கினர். 1764ல், மீண்டும் கோயில் கட்டப்பட்டது. 1802 ல் ராஜ ரஞ்சித்சிங் என்பவர் இக்கோயிலை தங்கத்தால் அலங்கரித்து, பொற்கோயில் என பெயரிட்டார். அரசியல் தலைவர்களும் இந்த கோயிலுக்கு வருவதுண்டு. இந்நிலையில் அமிர்தசரஸ் பொற்கோயிலில் இன்று(அக்.,02) பாத்திரம் கழுவி சேவை செய்து காங்., எம்.பி ராகுல் வழிபட்டார். அங்கு கொடுக்கப்படும் உணவை ராகுல் சாப்பிட்டார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ராகுல் பகிர்ந்துள்ளார். மேலும் அவர், “இன்று பொற்கோயிலான ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்பிற்கு சென்று என் சேவையை துவங்கினேன்.” என கூறியுள்ளார்.