அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை ராமதூத ஆஞ்சநேயர் கோவிலில் திருத்தளிகை சமர்ப்பித்தல் உற்சவம் நடந்தது.புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு அவலூர்பேட்டை ஏரிக்கரையில் ராமதூத ஆஞ்சநேயர் சுவாமிக்கு திருத்தளிகை சமர்ப்பித்த உற்சவம் நடந்தது. அதனையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.இரவு கருட சேவை, ராதாருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி வீதி உலா நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.