Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜஸ்தான் சன்வாரியா சேத் கோயிலில் ... சொந்த வீடு கட்ட வேண்டி ஓசூர் மலைக்கோவிலில் பக்தர்கள் வினோத வழிபாடு சொந்த வீடு கட்ட வேண்டி ஓசூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காந்தி ஜெயந்தி; காந்தி கோவிலில் புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
காந்தி ஜெயந்தி; காந்தி கோவிலில் புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

03 அக்
2023
10:10

கோபி; காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கவுந்தப்பாடி அருகே செந்தாம்பாளையம் காந்தி கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே செந்தாம்பாளையத்தில் காந்தி கோவில் நிறுவி, கடந்த, 1997 பிப்.,6ல் கும்பாபிஷேக விழா நடந்தது. கையில் தடியுடன், ஐந்தடி உயரத்தில், காந்தி சிலையும், அதன் எதிரே அன்னை கஸ்துாரி பாய் சிலையும் தத்ரூபமாக உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஜன.,26ல், குடியரசு தினம், ஆக.,15ல், சுதந்திர தினம், அக்.,2ல், காந்தி ஜெயந்தி என மூன்று நாட்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. பிற நாட்களில் மூன்று வேளையும் பூஜை நடக்கிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கவுந்தப்பாடி அருகே பெருந்தலையூர் பவானி ஆற்றில் இருந்து நேற்று தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. காலை, 9:00 மணிக்கு காந்தி மற்றும் அன்னை கஸ்துாரி பாய் சிலைக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் மற்றும் புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காந்திக்கு கதர் வேட்டி, கையில் தேசிய கொடி, நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல், அன்னை கஸ்துாரி பாய் சிலைக்கு, பல்வேறு வாசனை திரவியங்களில் அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமானோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தவித்த யாத்ரீகர்கள் 40 ... மேலும்
 
temple news
விருதுநகர்; விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் அமைந்துள்ள பாலாஜி கோயிலில் ஜூன் 30ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar