திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்; அக்.,15ல் துவக்கம்.. 19ம் தேதி கருட சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2023 05:10
திருமலை; திருப்பதி கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம், அக்.,15 முதல் 23 வரை நடக்கிறது. 19ம் தேதி கருட வாகனத்திலும், 20ம் தேதி புஷ்பக விமானத்திலும் சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
திருமலை திருப்பதியில் இந்த வருடம் செப்டம்பர் மாதம் ஒரு முறையும் அக்டோபர் மாதம் ஒரு முறையும் என இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. திருமலை திருப்பதியில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் பிரம்மோற்சவ விழா மிகவும் பிரசித்தம்.உலகம் முழுவதிலும் இருந்து பெருமாள் பக்தர்கள் இந்த விழா நாட்களில் பெருமாள் தரிசனம் பெற திரள்வர். மூன்று வருடத்திற்கு ஒரு முறை இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறும் அந்தவகையில் இந்த வருடம் இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.
நவராத்திரி பிரம்மோற்சவ நிகழ்ச்சி நிரல்;
15ம் தேதி இரவில் பெரிய சேஷ வாகனம் 16ம் தேதி காலை சின்ன சேஷ வாகனம் இரவில் அன்ன வாகனம் 17ம் தேதி காலை சிம்ம வாகனம் இரவில் முத்து பந்தல் வாகனம் 18ம் தேதி காலை கல்ப விருட்ச வாகனம் இரவில் சர்வபூபாள வாகனம் 19ம் தேதி காலை மோகினி அவதாரம் இரவில் கருட வாகனம் 20ம் தேதி காலை அனுமன் வாகனம் இரவில் கஜவாகனம் 21ம் தேதி காலை சூர்யபிரபை வாகனம் இரவில் சந்திரபிரபை வாகனம் 22ம் தேதி மாலை தங்க ரதம் இரவில் குதிரை வாகனம் 23ம் தேதி சக்ர ஸ்நானம்.