திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோயிலில் கார்த்திகை பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2023 05:10
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில் நடந்த புரட்டாசி கார்த்திகை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.
கார்த்திகை விழாவில் முருகபெருமானுக்கு பால், பழம், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, தேன் உள்ளிட்ட 21 வகை திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சுவாமி வெள்ளிக் கவசத்தில் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இதில் நத்தம், கோபால்பட்டி, சாணார்பட்டி, திண்டுக்கல், செந்துறை உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க சுவாமி புறப்பாடு நடந்தது. மேலும் கோவிலுக்கு அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக அங்குள்ள புனித தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் நீராடிவிட்டு, கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். இதைப்போலவே வேம்பார்பட்டி பாலமுருகன் கோயில், நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சன்னதியிலும் கார்த்திகை விழா பூஜை நடந்தது.