உலக நன்மை வேண்டி வாராஹி அம்மன் கோவிலில் பஞ்சமி யாக பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2023 06:10
சாணார்பட்டி, சாணார்பட்டி கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி தேய்பிறை பஞ்சமி யாக பூஜையை சஞ்சீவி சாமிகள் நடத்தி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி பூஜையில் சிறப்பு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் வாராஹி அம்மனுக்கு இலுப்ப எண்ணையில் விளக்கேற்றியும், தேங்காயில் தீபமேற்றியும் வழிபாடு செய்து, அம்பாளிடம் வேண்டுதல்கள் வைத்தனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அம்பாளுக்கு காணிக்கைகள் செலுத்தி நன்றி செலுத்தினர். உலக நன்மை வேண்டி நடந்த தேய்பிறை பஞ்சமி யாக வேள்வியில் அஸ்வருடா வாராஹி ஆக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பூஜைகளை அறக்கட்டளை நிர்வாகி சஞ்சீவி சாமிகள் நடத்தி வைத்தார். இந்த விழாவினை கம்பிளியம்பட்டி கிராம பொதுமக்களும், வாராஹி அறக்கட்டளை நிர்வாகிகளும் ஏற்பாடு செய்திருந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.