Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழகத்தில் ஹிந்து வழிபாட்டு ... பரவை முத்துநாயகி அம்மனுக்கு அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் பரவை முத்துநாயகி அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைத்தீஸ்வரன் கோயிலில் வடக்கு வாசல் 50 ஆண்டுகளுக்கு பின் திறப்பு; பக்தர்கள் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
வைத்தீஸ்வரன் கோயிலில் வடக்கு வாசல் 50 ஆண்டுகளுக்கு பின் திறப்பு; பக்தர்கள் மகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

04 அக்
2023
11:10

மயிலாடுதுறை: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டி வைக்கப்பட்டிருந்த வடக்கு பிரகார வாசல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. தருமபுரம் ஆதீனம் சிறப்பு பூஜைகள் செய்து திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதன் சுவாமி கோயில் உள்ளது இக்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமி செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் ஆகிய சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாளிக்கின்றனர் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் சுமார் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வடக்கு பிரகார வாசல் பூட்டப்பட்டு இருந்தது. கோயிலில் கடந்த 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது அப்பகுதியில் யாக சாலைகள் அமைக்கப்பட்டிருந்ததால் யாகசாலை பூஜைகள் நடந்த தினங்களில் மட்டுமே வடக்கு பிரகாரம் திறக்கப்பட்டது.இவ்வாறு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டப்பட்டிருந்த வடக்கு பிரகார வாசல் இன்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்திட வந்து செல்லும் வகையில் திறக்கப்பட்டது .தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் வடக்கு பிரகாரத்திற்கு சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது தொடர்ந்து தருமை ஆதீனம் திருக்கரத்தால் வடக்கு பிரகார வாசல் திறக்கப்பட்டு அதன் வழியே தருமபுரம் ஆதீனம் மற்றும் கட்டளை தம்பிரான் சுவாமிகள் பக்தர்கள் சென்று வந்தனர். சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வடக்கு பிரகார வாசல் திறக்கப்பட்டுள்ளது பக்தர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar