வைத்தீஸ்வரன் கோயிலில் வடக்கு வாசல் 50 ஆண்டுகளுக்கு பின் திறப்பு; பக்தர்கள் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2023 11:10
மயிலாடுதுறை: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டி வைக்கப்பட்டிருந்த வடக்கு பிரகார வாசல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. தருமபுரம் ஆதீனம் சிறப்பு பூஜைகள் செய்து திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதன் சுவாமி கோயில் உள்ளது இக்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமி செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் ஆகிய சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாளிக்கின்றனர் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் சுமார் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வடக்கு பிரகார வாசல் பூட்டப்பட்டு இருந்தது. கோயிலில் கடந்த 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது அப்பகுதியில் யாக சாலைகள் அமைக்கப்பட்டிருந்ததால் யாகசாலை பூஜைகள் நடந்த தினங்களில் மட்டுமே வடக்கு பிரகாரம் திறக்கப்பட்டது.இவ்வாறு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டப்பட்டிருந்த வடக்கு பிரகார வாசல் இன்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்திட வந்து செல்லும் வகையில் திறக்கப்பட்டது .தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் வடக்கு பிரகாரத்திற்கு சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது தொடர்ந்து தருமை ஆதீனம் திருக்கரத்தால் வடக்கு பிரகார வாசல் திறக்கப்பட்டு அதன் வழியே தருமபுரம் ஆதீனம் மற்றும் கட்டளை தம்பிரான் சுவாமிகள் பக்தர்கள் சென்று வந்தனர். சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வடக்கு பிரகார வாசல் திறக்கப்பட்டுள்ளது பக்தர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.