பதிவு செய்த நாள்
04
அக்
2023
12:10
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், நித்ய கால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி மற்றும் ஹிந்து பண்டிகை நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இது தவிர, கந்தசஷ்டி, மாசி பிரம்மோற்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன. செவ்வாய்க்கிழமை கந்தபெருமானுக்கு உகந்த நாள் என்பதால், செவ்வாய்க் கிழமைகளில் கந்தபெருமானை தரிசிக்க ஏராளமானோர் வருவது வழக்கம். அந்த வகையில், நேற்று செவ்வாய்க் கிழமையுடன் புரட்டாசி கிருத்திகை வந்ததால், கோவிலுக்கு காலை முதலே பக்தர்கள் வரத்துவங்கினர். பக்தர்கள் மொட்டை அடித்து சரவண பொய்கையில் நீராடி, கந்தனுக்கு அர்ச்சனை செய்தனர். ஓ.எம்.ஆர்., சாலை மற்றும் திருப்போரூர் மாடவீதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.