மகா வாராகி அம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2023 03:10
கோவை; சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் தெருவில் உள்ள மகா வாராகி அம்மன் கோவிலில் புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் வாராகி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.