பழநியில் கோயில் செக்யூரிட்டி, பக்தர் மோதல்; வீடியோ வைரல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2023 03:10
பழநி: பழநி, கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தருக்கும் பாதுகாப்பு செக்யூரிட்டிகளுக்கும் மோதல் நடந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
பழநி கோயிலில் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மலைக்கோவிலில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. இந்நிலையில் இரவு 9:00 மணிக்கு மேல் பக்தர்கள் சாதாரண நாட்களில் மலை மேல் செல்ல அனுமதிப்பதில்லை. நேற்று இரவு (அக்.,3 ) திருப்பூர் சேர்ந்த பக்தர் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்து இருந்தார். இரவு 9:00 மணிக்கு மேல் மலைக்கோயில் படிப்பாதை மூலம் செல்ல முயன்றார். அவரை பாத விநாயகர் கோயில் அருகே கோயில் செக்யூரிட்டிகள் தடுத்து பக்தர்களை அனுமதிக்கும் நேரம் கடந்து விட்டது எனவே மேலே யாரும் செல்ல முடியாது என கூறியுள்ளனர். வெகு தொலைவில் இருந்து வந்துள்ளோம் என பக்தர் செக்யூரிட்டியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.