அவிநாசி சேற்று மாரியம்மன் கோயிலில் பூச்சாட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2023 04:10
அவிநாசி: அவிநாசி அருகே ஸ்ரீ சேற்று மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.
அவிநாசி வட்டம், தெக்கலூர் ஊராட்சியில் எழுந்தருளியுள்ள சேற்று மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா நடைபெற்றது. முன்னதாக கடந்த மாதம் 26 ம் தேதி பூச்சாட்டு விழா துவங்கி கம்பம் நடுதல், அதனைத் தொடர்ந்து பூவோடு எடுத்தல், கம்பம் சுற்றி ஆடுதல், இளநீர் காவடி எடுத்து ஊர்வலமாக வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பூச்சாட்டு நிகழ்ச்சியில் முக்கிய தினமான இன்று தெக்கலூர் பகுதி பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். நாளை மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகின்றது. பூச்சாட்டு விழாவை முன்னிட்டு விழா குழுவினர் மற்றும் தெக்கலூர் கிராம மக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவை கஞ்சி கோணாம்பாளையம் அரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு 1008 தாமரை மலர்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.