கடலாடி முத்தாலம்மன் கோயிலில் காப்பு கட்டுதலுடன் விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2023 04:10
கடலாடி: கடலாடியில் பழமை வாய்ந்த முத்தாலம்மன் கோவில் உள்ளது. முளைக்கொட்டு உற்ஸவ விழாவை முன்னிட்டு கடந்த அக்.2 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முளைப்பாரிக்கான முத்து எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. அக்.6 வெள்ளிக்கிழமை அன்று விளக்கு பூஜையும், வருகிற அக்.,10 அன்று அம்மனுக்கு பால்குட ஊர்வலம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், மாடசாமி கோயிலில் நடுநிசி பூஜையும் நடக்க உள்ளது. பூஜைகளை பூஜகர் கூரியய்யா செய்திருந்தார். தலைவர் முத்துக்காமாட்சி மற்றும் நன்குடி வெள்ளாளர் உறவின்முறையினர், வ.உ.சி., இளைஞர் பேரவையினர் செய்திருந்தனர்.