Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடலாடி முத்தாலம்மன் கோயிலில் காப்பு ... பரவையில் புரட்டாசி பால்குட திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன் பரவையில் புரட்டாசி பால்குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் தங்கும் விடுதி பயன்பாடின்றி முடக்கம் : ரூ. 1 கோடி வீண்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயில் தங்கும் விடுதி பயன்பாடின்றி முடக்கம் : ரூ. 1 கோடி வீண்

பதிவு செய்த நாள்

04 அக்
2023
04:10

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ரூ.1 கோடி செலவில் கோயில் நிர்வாகம் கட்டிய பக்தர்கள் தங்கும் விடுதி 5 ஆண்டுகளாக பயன்பாடின்றி முடங்கி கிடக்கிறது. இதனால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்குள்ள தனியார் விடுதியில் தங்க வசதியின்றி, பலரும் கோயில் நான்கு ரதவீதி, அக்னி தீர்த்த கடற்கரையில் ஓய்வெடுத்து, புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். சுத்தமான குடிநீர், சுகாதாரமின்றி அமர்ந்து சாப்பிடும் பக்தர்கள் சில சமயம் உடமைகளை திருடர்களிடம் பறிகொடுத்தும் தவித்தனர். இதனை தவிர்க்க ராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் ரூ.1 கோடி செலவில் ஆண், பெண் பக்தர்களுக்கு தனியாக இலவச தங்கும் விடுதிகள் அமைத்து 2016ல் திறந்தது. துவக்கத்தில் பக்தர்கள் தங்கிய நிலையில்,, இங்கிருந்து 400 மீட்டர் தூரமுள்ள கோயிலுக்கு சென்று வர போக்குவரத்து வசதி இல்லாததால், பக்தர்கள் இங்கு தங்குவதை தவிர்த்தனர். இதனால் 2018 முதல் தங்கும் விடுதி பக்தர்களின் பயன்பாடின்றி 5 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது. இதனால் இரவில் சமூக விரோதிகள் புகுந்து மது குடிக்கும் பார் ஆக மாற்றி சமூக விரோத செயலில் ஈடுபடுகின்றனர். இதனால் இரும்பு கதவுகள், குடிநீர் குழாய்கள், கழிப்பறைகள் கதவுகள், விடுதியின் மேற்கூரை தகடுகள் உடைந்து அலங்கோலமாய் கிடப்பதால், பக்தர்களின் காணிக்கை நிதி ரூ.1 கோடி வீணாகி போனது.

கார் வசதி : முடங்கி கிடக்கும் இந்த தங்கும் விடுதியில் இருந்து கோயில் வரை பேட்டரி கார் அல்லது பிற வாகனங்களை இயக்கினால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். மேலும் ஏழை, நடுத்தர குடும்ப பக்தர்கள் தங்கும் விடுதியை பயன்படுத்த கூடும். எனவே வீணாகி போகும் தங்கும் விடுதியை பாதுகாக்க, ஹிந்து அறநிலைத்துறை ஆணையர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி கூறுகையில் : தங்கும் விடுதியை தற்போதைய அரசு முடக்கி வைத்துள்ளது. இக்கோயிலில் ஓராண்டுக்கு பக்தர்கள் மூலம் ரூ. 30 கோடி வருமாய் கிடைத்தும், விடுதியில் இருந்து போக்குவரத்து வசதி ஏற்படுத்த முன்வராதது வேதனைக்குரியது. இதற்கு விரைவில் தீர்வு காண விடில் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி கிழமையை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று காலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar